ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்.. மாரடைப்பால் பிரிந்த உயிர்
சென்னை: பிரபல கல்வியாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவருமான முனைவர் வசந்தி தேவி இன்று காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த வசந்தி தேவிக்கு 87 வயது ஆகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

வசந்தி தேவியின் உடல் அவரது விருப்பப்படியே கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்களின் படிப்புக்கு வழங்கப்பட்டது.
இவர் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி இருந்தார். இந்த பொறுப்பில் 1992 முதல் 1998 வரை நிர்வகித்தார். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். 1993ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது பெற்றிருந்தார். 2017 ல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருது வென்றிருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டில் சென்னை ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வசந்தி தேவி தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications