தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு வருமா? பெட்ரோல் விற்பனையாளர்கள்
சென்னை: தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்க தலைவர் முரளி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகாமல் இருக்க வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மிக அவசர தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சர்வ சாதாரணமாக உலாவி வருகிறார்கள்.

தண்டனை அளிக்கும் போலீஸ்
பலர் காரண காரியங்கள் இன்றி இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் சுற்றுகிறார்கள். இவர்களை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வருகிறார்கள். தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வீட்டை விட்டு வெளியே வந்து பைக்கில் சுற்றும் வாலிபர்களை போலீசார் அடித்து தண்டனை கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

பாயும் வழக்குகள்
இதனிடையே தமிழகத்திலும் வீட்டை விட்டு வெளியேறி தேவையின்றி சுற்றுவோர் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 1000 பேருக்கு மேல் நேற்று வழக்குகள் பாய்ந்துள்ளது. எனினும் வெளியில் வாகனத்தில் சுற்றுவது அதிகமாகவே உள்ளது. இதேபோல் அரசின் உத்தரவை மதிக்கமால் மொத்தம் மொத்தமாக மக்கள் கடைகளில் குவிந்து வாங்குவதும் அதிகமாக உள்ளது.

பெட்ரோல் விற்னை
இந்நிலையில் மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க தமிழகத்தில் 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் டீசல் விற்பனை என்ற கட்டுப்பாடு தேவை என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்க தலைவர் முரளி, பெட்ரோல் விற்பனை காலை 9 மணி முதல் 2 மணி வரை மட்டுமே விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவசர தேவைக்கு மட்டும்
அரசு வரையறுத்த பால், காய்றிகள், அவசர ஊர்திகள் மற்றும் அவசர தேவைகள், மற்றும் அரசின் வாகங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்ய தாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கை பின்பற்றாமல் கண்டபடி இருசக்கர வாகனங்களில் மக்கள் வருகிறார்கள் என்றும் இதற்கு கட்டுப்பாடு தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications