சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் மாயமான லட்சங்கள்.. ரகசிய இடத்தில் இருந்த சாவி.. மனைவி புகார்
சென்னை: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் நந்தூரி வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருக்கிறது. சந்தீப் நந்தூரியின் மனைவி சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். பீரோ அருகில் ரகசியமாக வைத்திருந்த சாவி மூலம் பீரோவை திறந்து பணத்தை திருடியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுதொடர்பாக போலீசார் வேலைக்காரர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரிய அதிகாரிகள், பெரிய பணக்காரர்கள், நடிகர்,நடிகைகள் வீடுகளில் சில நேரங்களில் அவர்களுக்கு மிகவும் தெரிந்தவர்களே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது உண்டு. ஏனெனில் மிகவும் பாதுகாப்பான அவர்களின் வீடுகளில் திருடர்கள் சுவர் ஏறி வந்தோ அல்லது வீட்டின் பூட்டை உடைத்தோ கொள்ளையடிப்பது சவாலானது. அப்படியே கொள்ளையடித்தாலும் சிசிடிவி காட்சிகள், தெருமுனையில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொள்வார்கள். போலீசாரும் தனிப்படை அமைத்து எளிதாக பிடித்துவிடுவார்கள்.

வேலைக்காரர்கள் திருடினால் சிக்கல்
சென்னையில் எல்லாம் திருடினால், எங்கே சென்றாலும் சிக்கி கொள்வார்கள். ஏனெனில் சென்னையில் அந்த அளவிற்கு சிசிடிவி கேமராக்களும், எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் பல்வேறு வசதிகளும் உள்ளன. அதேநேரம் நெருக்கமானவர்கள் திருடினாலும் அல்லது தெரிந்தவர்கள் அல்லது வீட்டில் வேலை செய்தவர்கள் சிறுக சிறுக திருடினால் கண்டுபிடிப்பது கடினம். அவர்களிடம் விசாரணை நடத்தி தான் மேற்கொண்டு உண்மையை கண்டுபிடிக்க முடியும்.
ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் திருட்டு
அந்த வகையில் சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் நந்தூரி. வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருக்கிறது. இவர் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அத்யஷா பரிதா (வயது 41) சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
மனைவி அளித்த புகார்
அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், "நானும், எனது கணவரும் குடும்பத்தோடு சென்னை கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். அண்மையில் நானும், எனது கணவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பினோம். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ லாக்கர் திறந்து கிடந்தது. பீரோ அருகில் ரகசியமாக வைத்திருந்த சாவி மூலம் பீரோ திறக்கபட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தில், ரூ.5 லட்சத்தை காணவில்லை. அந்த பணம் திருடப்பட்டிருக்கிறது
வேலைக்காரர்கள் மீது சந்தேகம்
வீட்டில் சமையல்காரராக வேலை செய்யும் பாலன், இதர வேலையாட்களான தேவி, ராஜேஸ்வரி ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி அத்யஷா பரிதா கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்காரர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications