சேலம் 8 வழி சாலை.. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்.. முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி!
சேலம் 8 வழி சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சேலம் 8 வழி சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த நிலையில் சேலம் 8 வழி சாலை தீர்ப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தொழில் மண்டலம்; எட்டு வழிச் சாலை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். இதனால் பலர் புதிய வேலைகளை பெறுவார்கள்.
இது அதிமுகவின் கனவுத்திட்டம்தான். ஆனாலும் தீர்ப்பை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது அதற்கு எதிராக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications