இரண்டாவது முறையாக ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா.. கருப்பு உடையில் கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாள் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் மெரினா கடற்கரையில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக காலையிலேயே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வருகை தந்தனர்.
Recommended Video
ஓபிஎஸ் உள்ளிட்டோர் வெள்ளை ஆடையிலும் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கருப்பு உடையிலும் வந்திருந்தனர். அங்கு ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழி
அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற போது அதிமுக - அமமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் வருகை தந்திருந்தார். அப்போது
அங்கு குழுமியிருந்த அமமுகவினர் "சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க" என கோஷமிட்டபடி வந்தனர்.

முற்றுகை
அப்போது ஓபிஎஸ் -ஈபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அஇஅதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டதே இந்த சலசலப்பு க்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்த சசிகலா வருகை தந்திருந்தார்.

மலரஞ்சலி
கருப்பு நிற சேலை அணிந்திருந்த சசிகலா, மலரஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா சென்றிருந்தார். அங்கு சமாதியில் படுத்து கொண்டு அழுதார். தற்போது இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது சமாதிக்கு சென்றுள்ள அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

சசிகலா அறிக்கை
அதிமுக உள்கட்சி தேர்தல் குறித்து சசிகலா இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒற்றுமையாக இருந்தால்தான் எதிரிகளை வெல்ல முடியும். அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications