எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவுக்குதான் மிகப் பெரிய மக்கள் எழுச்சி.. சொல்வது பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: எம்.ஜி.ஆருக்குப் பின் சசிகலாவுக்குதான் மிகப் பெரிய மக்கள் எழுச்சி உள்ளது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
Recommended Video

சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க முயற்சிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது முஸ்லிம் லீக்கை குறிப்பிட்டிருக்கலாம். பாஜகவை சொல்வதற்கான வாய்ப்பு இல்லை.

திமுக ஆட்சிக்கு வராது
திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசின் திட்டங்கள் லீக்
அதிமுகவும் தமிழக அரசும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் திட்டங்களை முன் கூட்டியே ஸ்டாலினுக்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். யாரோ அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் குறித்தும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர்
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளது. ஆகையால் அவர் தான் முதல்வர் வேட்பாளர்.

சசிகலாவுக்கு வரவேற்பு
பெங்களூரிலிருந்து சசிகலா தமிழகத்திற்கு வந்த போது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது இதை பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன். இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?












Click it and Unblock the Notifications