சசிகலா மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு.. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை.. 12-ந் தேதி முதல்!
சென்னை: சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், சாட்சிகளிடம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் விசாரணை தொடங்க உள்ளதாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஜெ.ஜெ. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் வாங்கியது, உள்ளிட்டவை தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலவாணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். சசிகலா மீது மட்டும் மொத்தம் 4 வழக்குகள் தொடரப்பட்டன.

வீடியோ கான்பரன்சிங்
பெங்களூர் சிறையில் சசிகலா உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலமே இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 20-ந் தேதி 2 வழக்குகளில் காணொலி காட்சி மூலம் எழும்பூர் கோர்ட்டு சசிகலா மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது.

நினைவில் இல்லை
அப்போது நீதிபதி மலர்மதி கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை, தெரியாது, நினைவில் இல்லை, தொடர்பு இல்லை என்பது போன்ற பதில்களை மட்டுமே சசிகலா அளித்தார். அதன்பின் கடைசியாக அமலாக்கத்துறை குறுக்கு விசாரணைக்கு மட்டும் சசிகலா ஒப்புக்கொண்டார்.

ஒரு மணி நேரம் விசாரணை
இந்நிலையில், மற்ற 2 வழக்குகளில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் நேற்று விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

காது கேட்குமா?
அப்போது நீதிபதி மற்றும் தனது வக்கீல்களுக்கு சசிகலா கைகூப்பி வணக்கம் சொன்னார். அவரிடம் பெயர், வயது, காது கேட்குமா, ஆங்கிலம் தெரியுமா என மாஜிஸ்திரேட் கேட்டார். பிறகு அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக அமலாக்க துறையினரின் குற்றச்சாட்டை தமிழில் படித்து காட்டினார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் ஏற்கிறீர்களா, அல்லது மறுக்கிறீர்களா என சசிகலாவிடம் கேட்டார்.

மறுக்கிறேன்
அதற்கு சசிகலா, "இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் நான் மறுக்கிறேன். என் வக்கீல் மூலமாக, அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார். இதையடுத்து 4 அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வருகிற 12-ந் தேதி அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை துவங்கப்படும் என்று உத்தரவிட்டார்.
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications