சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சிக்காக வருவேன்.. மக்களுக்காக உழைப்பேன்..யாராலும் தடுக்க முடியாது.. சசிகலாவின் புது ஆடியோ ரிலீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களின் உரிமை மற்றும் நலனுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா பேசியுள்ளதாக மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.

இது தன்னை எதிர்க்கும் அதிமுகவினருக்கு கொடுக்கப்படும் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா கடந்த 10 நாட்களாக அதிமுகவினரின் தூக்கத்தை கெடுத்து வருவதாக அவரது செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது! ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!

ஒதுங்குவதாக அறிவித்த போது சசிகலாவால் அதிமுகவுக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தற்போது கட்சியை கைப்பற்ற அவர் வருவதாக அறிவித்துள்ளது நிம்மதியை கெடுத்துள்ளது.

ஆடியோ

ஆடியோ

முதல் ஆடியோவில் ஒரு தொண்டரிடம் சசிகலா பேசும் போது கவலைப்படாதீங்க, இந்த கொரோனா கீரோனாலாம் முடியட்டும் நான் சீக்கிரம் வருவேன். எல்லாத்தையும் சரி செய்துவிடலாம். நீங்கள் எல்லாரும் பத்திரமாக ஜாக்கிரதையாக இருங்கள் என கூறியிருந்தார். மேலும் அதிமுகவில் சண்டையிட்டு கொள்வது வேதனை தருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

சசிகலா

சசிகலா

இதை அதிமுக நிர்வாகிகள் மறுத்தனர். சசிகலா ஆடியோவில் பேசுவது அமமுக தொண்டருடன்தானே தவிர அதிமுக தொண்டர்களுடன் இல்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து சென்னை அதிமுக நிர்வாகி ராஜா ரகுபதியுடன் அவர் பேசிய ஆடியோ வெளியானது.

சசிகலா

சசிகலா

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ சசிகலா கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அதிமுகவில் உறுப்பினராகவே இல்லை. அவர் பேசி வருவது அமமுக தொண்டர்களுடன்தான் என்றார். மேலும் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகத்திடம் சசகிலா பேசுகையில் கட்சி நன்றாக போக வேண்டும்.

உரிமை

உரிமை

அதனால்தான் ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களிடம் பேசி வருகிறேன். விரைவில் எல்லாத்தையும் சரி செய்துவிட்டு ஜெயலலிதா இருந்த போது கட்சி எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு வருவேன் என்றார். இந்த நிலையில் மதுரை மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் ஆரோக்கியராஜாவிடம் பேசுகையில் தமிழக மக்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன், அதை யாராலும் தடுக்க முடியாது என்றார் சசிகலா.

English summary
Sasikala says that she cannot be controlled by anyone when she is coming to work for upliftment of TN People.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X