அதென்ன இணை ஒருங்கிணைப்பாளர்?.. அப்படி ஒரு பதவியே பைலாவில் இல்லையே.. எடப்பாடிக்கு செக் வைக்கும் சசி
சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ அண்மைக்காலமாக வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வராக்கிய தன்னையே எடுத்தெறிந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா கடுங்கோபத்தில் இருக்கிறார்.
அதன் விளைவுதான் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன் என்பது குறித்து அவர் ஆடியோவில் தெரிவித்திருந்தார்.

அதிமுக
அதாவது கொங்கு மண்டல மக்கள் அதிமுகவுக்குத்தான் எப்போதும் ஓட்டு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது என அந்த மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அதிமுக
அதனால் அடுத்த தேர்தலிலும் தொடர்ந்து மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பர் என்ற அடிப்படையில்தான் எடப்பாடியை முதல்வராக்கினேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் பூண்டியை சேர்ந்த பக்கிரிசாமியிடம் பேசிய ஆடியோ ரிலீஸாகியுள்ளது.

சசிகலா எதிர்காலம்
அதில் சசிகலா கூறுகையில் எதிர்காலத்தில் கட்சிக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும் என விதியை எம்ஜிஆர் கொண்டு வந்தார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை யாராலும் மாற்ற முடியாது.

இணை ஒருங்கிணைப்பாளர்
அது போல் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பொறுப்பே இல்லை என சசிகலா கூறியுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியையே தொடர்ந்து சசிகலா விமர்சித்து வருவது கண்கூடாக தெரிகிறது. கொங்கு மண்டலத்தினருக்கே எடப்பாடி முக்கியத்துவம் கொடுப்பதாக தென் மாவட்டத்தினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications