வண்டியை விடு.. தஞ்சாவூருக்கு விரைந்த சசிகலா.. அடுத்து நேரா "அங்கதான்" போக போறாங்களாம்! என்ன பிளான்?
சென்னை: இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூர் புறப்பட்டார் சசிகலா.சாலை மார்க்கமாக செல்லும் அவர் வழியில் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
அதிமுகவை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் சசிகலாவின் முயற்சிகள் அனைத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சசிகலாவிற்கு ஆதரவாக "ம்" என்று ஒற்றை வார்த்தை சொன்னால் போதும்.. உடனே அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நிலைதான் அதிமுகவில் நிலவி வருகிறது. இதனால் சசிகலா அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் கொஞ்சம் திணறி வருகிறார்.

என்ன செய்தார்
கடந்த 4ம் தேதிதான் சசிகலா தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை ஆகிய பகுதிகளுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். அங்கு தென்மண்டல அதிமுக நிர்வாகிகளுடன் இவர் சீக்ரெட் மீட்டிங் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதோடு ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவையும் சசிகலா அங்கே சந்தித்தார்.

சந்திப்பு
இதையடுத்து ஓ ராஜா கடைசியில் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மூலம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சிறப்பு யாகம் ஒன்றை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சசிகலா இரண்டாம் கட்டமாக பல்வேறு தலைவர்களை சந்திக்கும் வகையில் இன்று மீண்டும் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த முறை டெல்டா மற்றும் கொங்கு மாவட்டங்களை குறி வைத்து அவர் பயணம் மேற்கொள்கிறார்.

தஞ்சாவூர்
அதன்படி இன்று சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்ல இருக்கிறார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட தலைவர்களை சசிகலா சந்திக்க உள்ளார். அதன்பின் 20 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்திற்கு சென்று நடராஜனின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் அங்கிருந்து அப்படியே சேலத்திற்கு நேராக செல்லும் திட்டத்தில் சசிகலா இருக்கிறார். நேராக எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டைக்கு சென்று தனக்கு ஆதரவு திரட்ட சசிகலா முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் சிக்கல்
ஆனால தஞ்சையில் கிடைக்கும் ஆதரவு, நிர்வாகிகள் கொடுக்கும் அறிவுரையை வைத்து சசிகலா சேலம் பயணத்தில் மாற்றங்களை கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தஞ்சை செல்லும் சசிகலா.. செல்லும் வழி முழுக்க பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்த உள்ளார். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், மயிலம் முருகப்பெருமான் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர், ஆதிபராசக்தி கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில் ஆகிய வழிபாட்டு தளங்களில் வழிபாடு நடத்த இருக்கிறார்.












Click it and Unblock the Notifications