"டோட்டல் சேஞ்ச்".. கம்முன்னு சசிகலா.. பேச்சை குறைச்சு.. செயல்ல காட்டுவோம்.. புது அவதாரம் பூணுகிறார்!
டாக்டர்களிடம் சசிகலா பேசிய பேச்சு வெளியாகி உள்ளது
சென்னை: வழக்கமான சசிகலாவாக இப்போது அவர் இல்லை.. முன்பை விட வைராக்கியமாக மாறியிருக்கிறார்.. அவரை வேறு கோணத்தில் தமிழ்நாடு பார்க்கப் போகிறது என்று அமமுகவினர் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது டாக்டர்களும் கூட சசிகலாவின் மனோதிடத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டனராம்.
வழக்கமான நோயாளிகள் போல நீங்கள் இல்லை, ரொம்ப திடமாக இருக்கிறீர்கள்.. அதனால்தான் கொரோனா சீக்கிரமே குணமாகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைராக்கியம்
சசிகலாவும் இப்போது முன்பை விட உறுதியாக மாறியிருக்கிறாராம். வைராக்கியம் அதிகரித்துள்ளதாம். இதுவரை அவர் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லையாம். அமைதியாக இருக்கிறாராம். தனது உறவுகளிடமும் கூட, ஆடக் கூடாது. அமைதியாக இருக்கணும் என்று கூறியுள்ளாராம்.

ஆட்டம்
இதற்கு அர்த்தம், ஆட்டம் போட்டு காரியத்தைக் கெடுக்கக் கூடாது. இனி நேரடியாக நான் மக்களிடமே போகப் போறேன். பேச்சைக் குறைத்து விட்டு செயலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். எனக்கு இது மறு பிறவி போல. இனி மக்களுடன்தான் இருப்பேன் என்று உற்சாகமாக கூறியுள்ளாராம் சசிகலா. தனது உடல் நிலையை சற்று ஸ்திரப்படுத்தி விட்டு மக்களிடம் வந்து சேர அவர் தயாராகி வருகிறாராம்.

சந்திப்பு
அதிமுகவை கைப்பற்றுவது என்பதில் அமமுக உறுதியாக உள்ளது என்ற போதிலும் கூட மக்களை நேரடியாக சந்திக்கும் சசிகலாவின் திட்டம்தான் அமமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது. மக்களிடம் நாம் போகும்போது தானாகவே அதிமுக மொத்தமாக நம் பக்கம் வந்து விடும் என்பதே அவர்களின் உற்சாகம். அதிமுகவினரும் கூட பெரும் ஆர்வத்துடன் சசிகலாவுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஜெயில்
பெங்களூரில் அத்தனை மாஸ் காட்டிய அமமுகவின் அதிரடியைப் பார்த்து கர்நாடகவே ஆடிப் போய் விட்டதாம். இத்தனை காலம் ஜெயிலில் இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று அங்கு ஆச்சரியப்டுகிறார்கள். இங்கேயே இத்தனை வரவேற்பு என்றால் சசிகலாவுக்கு தமிழ்நாட்டில் எப்படி வரவேற்பு அளிக்கும் அமமுக என்பதே பலரின் ஆச்சரியமாக உள்ளது.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications