அதி கனமழை அச்சுறுத்தல்.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. முழு விவரம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்க காரணமாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று கரையை கடக்கிறது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. சென்னைக்கு 430 கி.மீ கிழக்கு தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையில், காற்றழுத்த மண்டலம் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் 2 நாட்கள் விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications