புல்டோசர் அரசியல் கேவலமானது! மக்களின் கவனத்தை மடைமாற்ற வெறுப்பு அரசியல்! பாஜக மீது எஸ்டிபிஐ சாடல்!
சென்னை: புல்டோசர் அரசியல் கேவலமானது என்றும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளில் நாடு சிக்கித் தவிக்கும் நேரத்தில் அதனை மக்களிடமிருந்து மடைமாற்ற பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருவதாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷாஃபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜனவரி மாத கடும் குளிரில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை வீடற்றவர்களாக ஆக்கக்கூடிய சுமார் 4,000 குடும்பங்களின் வீடுகளை இடிக்கும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு நன்றி.
உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அது நிரந்தரத் தீர்வாகாது. ஏனெனில், பாஜக தனது இந்துத்துவா அரசியலுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதால் வேண்டுமென்றே முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளை குறிவைக்கிறது.
உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள பன்பூல்புரா மற்றும் கஃபுர் பஸ்தியில் வசிப்பவர்கள் தங்களுடைய நிலத்தின் சரியான ஆவணங்களை வைத்திருப்பதாக ஆர்.டி.ஐ. பதில்கள் வெளிப்படுத்துகின்றன.
மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் ஹல்த்வானியில் வெற்றி பெற இயலாததன் விரக்திதான், அங்கு அரசியல் மக்கள்தொகையை மாற்றுவதற்கான பாஜகவின் மோசமான வடிவமைப்பின் கை வேலையாக இந்த புல்டோசர் அரங்கேற்றம் நடைபெறுகிறது.
ஏற்கனவே, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளில் நாடு சிக்கித் தவிக்கும் நேரத்தில், அதனை மக்களிடமிருந்து மடைமாற்ற, இதுபோன்ற கேவலமான அரசியல் நகர்வுகளை, வெறுப்பு அரசியலை பாஜக ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி வருகிறது. இவ்வாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷாஃபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications