தலைவர் எழுதிய பாடல் எங்கேப்பா..? படத்திறப்பு விழா முடிந்ததும் முனுமுனுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள்..!
சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவின் போது அவர் எழுதிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடல் இசைக்கப்படாதது குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.
நிகழ்ச்சி நிரலை பொறுப்பேற்று நடத்திய சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் இந்த பாடல் இசைக்கப்படுவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களா என்பது தெரியவில்லை.
செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி எழுதிய இந்தப் பாடலை முந்தைய திமுக அரசின் போது அரசு விழா மேடைகளில் அவர் ஏறும்போது ஒலிக்கவிடுவது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசு
திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் கோவையில் செம்மொழி மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தினார் கலைஞர். அந்த மாநாட்டிற்காக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடலையும் எழுதியிருந்தார். செம்மொழி மாநாட்டிற்கு பிறகு, அரசு நிகழ்ச்சியிலும் சரி , திமுக நிகழ்ச்சியிலும் சரி... நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அதாவது நிகழ்ச்சியின் மேடையை நோக்கி கலைஞர் வரும் போது , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடல் ஒலிக்கும்.

படத்திறப்பு
அந்த பாடலின் ரம்யம் உடன்பிறப்புகளை மெய்ச்சிலிர்க்க வைக்கும். 2011 ஆட்சியை திமுக இழந்த பிறகு, திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் ஒலிக்க மறந்ததில்லை. இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. ஆனால், பிறப்பொக்கும் உயிர்க்கும் பாடல் அரசு நிகழ்ச்சியில் இடம் பெறுவதில்லையாம். வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் கலைஞரின் படத்திறப்பையும் ஜனாதிபதியை வைத்து 2-ந்தேதி நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

ஆதங்கம்
ஜனாதிபதி, மேடைக்கு வரும் போதோ அல்லது கலைஞரின் உருவப் படத்தை திறந்து வைக்கிற போதோ , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற கலைஞரின் பாடலை ஒலிப்பரப்புவார்கள் என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் ஒலிக்கவில்லை. தமிழ் உணர்வுள்ள எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இது குறித்து தங்கள் ஆதங்கத்தை நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது பேசிக் கொண்டே வந்தனர்.

நினைவுகூராமல்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதான் இதனை கவனித்திருக்க வேண்டும் என்றும், கலைஞரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்று பல யோசனைகளைத் தெரிவித்த தலைவர் தளபதிக்கும் கூட இந்த பாடல் இடபெற வேண்டும் என்ற நினைவு வராமல் போய்விட்டதே என்றும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications