Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

Senthil Balaji to get bail or not? Chennai court judgement today

அன்றைய தினமே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த முறை காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொலி வாயிலாக அவர் ஆஜரானால் போதும் என்றும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி காணொலி மூலம் நீதிபதி முன்பு கடந்த 15 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்றைய தினமே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை விசாரித்தார். செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்திருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டிருந்தார். இன்றைய தினம் தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+