இன்னும் கொஞ்ச நாள்..அழிவை நோக்கி செல்லும் உலகம்! தீக்கோளமாய் மாறபோகும் பூமி..அண்ணா பல்கலை அதிர்ச்சி
சென்னை: தற்போது நிலவிவரும் வெப்பநிலையை விட 2100ஆம் ஆண்டில் இதைவிட பல மடங்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், வருடத்தில் 120 நாட்கள் வெப்ப அலை வீசும் என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலம் என்றாலே மே மாதத்தில் தான் வெயில் சுட்டெரிக்கும் ஆனால் தற்போதையெல்லாம் ஜனவரி மாதத்தில் இருந்தே வெயில் தனது வேலையை காட்ட துவங்கி விட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் மட்டுமே 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலை தொடும். ஆனால் தற்போது பத்து முதல் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பேரன்ஹீட் வெயில் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வெப்பநிலை அதிகரிப்பு: காலை 7 மணிக்கே தொடங்கும் வெயிலின் தாக்கம் இரவு 7 மணி வரை இருக்கிறது. 6:00 மணிக்கு சூரியன் மறைந்து விட்டாலும் இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாட்கள் செல்லச் செல்ல மேலும் அதிகரிக்கும் எனவும் 2100ஆம் ஆண்டில் வெப்பநிலை தற்போது இருப்பதைவிட பல மடங்கு உயிரும் என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்: காலநிலை மாற்றம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அந்த துறையின் இயக்குனர் கொரியன் ஜோசப் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு அறிக்கையானது தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இனி வரும் காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் ஆனது மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலை: இதன் காரணமாக வேளாண்மை மற்றும் விவசாய பொருட்களின் உற்பத்தியானது மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது 10 முதல் 20 நாட்கள் வரை இருக்கும் வெப்ப அலையின் தாக்கம் ஆனது 2100 ஆம் ஆண்டில் 90 முதல் 120 நாட்கள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேளாண் விவசாய பொருட்களின் உற்பத்தியானது 10 சதவீதத்திற்கும் மேல் குறையும் என அஞ்சப்படுகிறது.
வானியல் மாற்றம்: 2014ஆம் ஆண்டு ஆண்டுக்கு முன்னதாக 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வானியல் மாற்றம் குறித்து ஆய்வு நடத்தியதில் கடந்த 30 ஆண்டுகளில் 30 நாட்கள் வரை மட்டுமே வெப்பாலை வீசி இருந்தது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெப்ப அலை வீசி நிலையில் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வானிலையில் மாற்றம் சுமார் இரண்டு டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்து இருக்கிறது. இது 2 முதல் 3 நாட்கள் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக அண்ணா பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கார்பன் டை ஆக்ஸைடு: மேலும், உலக அளவில் வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என உலக நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதனை தாண்டி அதிகரித்து வந்திருக்கிறது. தட்பவெப்ப நிலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரியமில வாயுவின் அளவு அதிகரித்திருப்பதை காரணம் எனக் கூறப்படுகிறது. 1980ஆம் ஆண்டில் 270 என்ற அளவில் இருந்த காரியமில வாயுவின் அளவு தற்போது 430 அதிகரித்து இருக்கிறது என அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
என்ன காரணம்?: பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் அதிகரிக்கும் பயன்பாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவை கார்பன் டை ஆக்சைடு அளவை அதிகரித்ததாகவும் இதனால் ஆக்சிஜன் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதும் காடுகளின் பரப்பு குறைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு இடங்களில் தட்பவெப்பநிலையின் அளவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருதும், நிலையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கொரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications