மாணவிகளுடன் நடனம் ஆடும் சிவசங்கர் பாபா.. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்களை அங்கு படித்த மாணவிகள் கூறி வரும் நிலையில் அவர் பொது இடத்தில் மாணவிகளுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. இவர் தன்னை கிருஷ்ணன் என கூறி கொண்டு மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவர் மீது மாணவிகள் கூறும் புகார்கள் அதிர வைக்கின்றன. மாணவிகளுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளாராம்.

பாபா
தன்னை கடவுளின் அவதாரம் என்றே கூறும் பாபா, தன்னை கிருஷ்ணர் என கூறும் இந்த பாபா, மாணவிகளை கோபிகா என கூறி பாலியல் கொடூரங்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக மாணவிகளை செக்ஸ் படங்களை பார்க்க வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

10ஆம் வகுப்பு
9ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மதுபானங்களை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை தான் கண்ணால் பார்த்ததாகவும் புகார் அளித்த மாணவி கூறியுள்ளார். இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடவடிக்கை
இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுகின்றன. இந்த நிலையில் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? என கேட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே தற்போது மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் கைதானது போல் இவரும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
|
பாலியல் புகார்
இந்த பாலியல் புகார்களுக்கு மத்தியில் சிவசங்கர் பாபா மாணவிகளுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடுவில் பாபா நின்றுக் கொண்டு மாணவிகள் புடைச்சூழ நடனமாடுகிறார். பொதுவெளியில் இவர் ஆடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications