"குட்டி சாவக்கர்".. மோடி "இதுக்கு" மட்டும் அதிகம் பயன்படுகிறார் போல.. பாய்ந்து வந்த ஓவைசி.. அட்டாக்!
சென்னை: பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.
அவரின் இந்த பேச்சு உலகம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்தது.

விமர்சனம்
நுபுர் சர்மா பேச்சை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பல கடுமையாக கண்டித்து இருந்தன. அதோடு கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது.

இந்தியா விளக்கம்
இதற்கு இந்தியா அளித்த விளக்கத்தில், கத்தாரின் சம்மனை தொடர்ந்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது

என்ன சொன்னார்
இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ள, கலக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று மத்திய அரசால் கூறப்பட்டவர்கள்தான் பாஜக சார்பாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வருகிறார்கள். இவர்களுக்கு அமித் ஷாவிடம் இருந்தே நேரடி ஆதரவு உள்ளது. இதனால்தான் போலீஸ் இன்னும் நுபுரை கைது செய்யவில்லையா? அவரை கட்சியில் இருந்து நீக்கியது எல்லாம் பித்தலாட்டம். அரசின் ஆதரவோடு இந்த "குட்டி சாவக்கர்கள்" செயல்படுகிறார்கள்.
Recommended Video

ஓவைசி கமெண்ட்
இந்த இனப்படுகொலை கும்பல் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு இருந்தால், பாஜக நிர்வாகிகள் நபிகள் நாயகத்தை இகழ்ந்து பேசி இருக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகள் உள்ளன. அவர்களின் பிரச்சனைகளை பற்றி மோடி பேசவில்லை. மாறாக அவர் வெளிநாட்டின் அழுத்தத்திற்கு மட்டும் அதிகம் பயன்படுகிறார். மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது என்று, ஓவைசி கமெண்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications