அதிரடி.. தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா ஹைகோர்ட்டில் திடீர் வழக்கு.. கொலை வழக்கு பதிய கோரிக்கை
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஸ்னோலினின் அம்மா வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டுமின்றி தேசியளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு 17 போலீஸார் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு, இழப்பீட்டை அதிகரித்து வழங்குமாறும் பரிந்துரை செய்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது எனவும், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் அதனை எதிர்த்து துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலினை பறிகொடுத்த வனிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசு இயந்திரத்தனமாக செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்னோலின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் வனிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications