சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் புனரமைக்கப்பட்ட ஹாக்கி ஆடுகளம்.. திறந்து வைத்தார் ஸ்டாலின்
சென்னை: சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டி தொடர் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஹாக்கி போட்டியை இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.12 கோடி நிதியை ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே வழங்கிவிட்டார். இந்த நிலையில் தான், சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications