திமுக ஆட்சி அமைந்தபிறகும்... ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது -ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி அமைந்தபிறகும் ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் மற்றும் ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்
''ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் 'ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.''

''மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானது தான்.''
''தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.''
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க திமுக ஒப்புதல் தெரிவித்த நிலையில், அது தொடர்பான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக ஏன் அந்த முடிவை எடுத்தது என்பது பற்றியும் ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்தை கொண்டு திறக்கப்படாது என்ற உறுதியையும் அவர் இந்தப் பதிவின் மூலம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications