ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு.. ஐகோர்ட்டில் வாதம்
சென்னை: தூத்துக்குடியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை ஸ்டெர்லைட் நிறுவனம் பாடி வருவதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 10-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் நிலத்தடி நீர், காற்று மாசுவை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியது உண்மை என்றார்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு வகை மாசுகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆலையால் ஏற்படும் மாசின் அளவு அதிகரித்துள்ளது. ஆலையில் இருந்த கழிவுக்குட்டையில் சல்பைடு, மக்னீசியம் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருந்ததை ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆலைக்கு தான் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரம் சரி செய்ய முடியாத பாதிப்பை சந்தித்துள்ளது என வாதிட்டார்.
விதிகளை பின்பற்றாததால் ஒவ்வொரு முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதும், சில நிபந்தனைகளை மட்டும் பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றம் மூலம் ஆலையை இயக்க அனுமதி பெற்று விடுவதாக குறிப்பிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
எனவே இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் தான் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications