தமிழகத்தில் சுட்டெரித்த சூரியன்... கரூர் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் - எங்கு எவ்வளவு வெப்பம் பதிவு
தமிழகத்தில் அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் அதாவது 103.1 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னை: தமிழகத்தில் பங்குனி மாத வெயில் பட்டையை கிளப்புகிறது. இன்று 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 ஊர்களில் இன்று அதிக அளவில் வெயில் சுட்டெரித்தது.
அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் அனலாய் தகிக்க ஆரம்பித்து விட்டது. காலை நேரங்களில் சுடும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்க ஆரம்பித்து விட்டனர்.
மழைக்கு இதமாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது என்றாலும் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தை மக்களால் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிக பட்ச வெப்பம் பதிவு
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது.இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய வெப்பநிலை
தமிழகத்தில் இன்று 5 ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 ஊர்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைக் கடந்துள்ளது.

எங்கு எவ்வளவு வெப்பம்
அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் அதாவது 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் அதாவது 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் அதாவது 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, சேலத்தில் 38 டிகிரி செல்சியஸ் அதாவது 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

கோடை மழைக்கும் வாய்ப்பு
பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி மழையும் பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு இதமாக இடியும் மின்னலுமாய் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications