ஞாயிறு லாக்டவுன்: அம்மா உணவகம் வழக்கம் போல செயல்படும் - சென்னை மாநகராட்சி
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அம்மா உணவகம் வழக்கம் போல செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தினசரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரியும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 25 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
அன்றைய தினம் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மளிகைக் கடைகள் , துணிக்கடைகள், இறைச்சிக்கடைகள், உணவகங்கள், மூடப்பட்டிருக்கும். மருந்துகடைகள், பால் பூத்துகள் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து கடைகளும் மூடப்பட உள்ளதால் இன்றைய தினமே காய்கறி சந்தைகளிலும், இறைச்சிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இந்த நிலையில் நாளைய தினம் அம்மா உணவகங்கள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படும் அம்மா உணவகம் மூடப்பட்டால் ஏழைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டது.
சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி உணவு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், போதுமான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications