தட்கலில் விவசாய மின் இணைப்புகள்? மின்சார வாரியம் ஒரே போடு.. தமிழக அரசுக்கு பெரிய கோரிக்கை.. ஹப்பாடா
சென்னை: 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்ததில், வெறும் 20,000 மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு எப்போது மின் இணைப்புகள் வழங்கப்படும்? என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

மின்வாரியம்: இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாகவே வழங்குகிறது. அந்தவகையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இப்போதைக்கு 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு இணைப்புக்கு வருடத்துக்கு மின்சார வாரியத்துக்கு 30,000 ரூபாய் செலவாகிறது.. வருடத்துக்கு 7,280 கோடி ரூபாய் செலவாகிறது. இதை, தமிழக அரசே வழங்குகிறது.
விவசாய மின் இணைப்பு: ஆனால் தற்போது மின் வாரியமும், தமிழக அரசும் நிதி நெருக்கடியில் இருப்பதால், வருடந்தோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழஙகப்பட்டு வருகின்றன. கடந்த 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் பேர் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன..
அதேபோல, கடந்த 2022 - 23ல், 50,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன.கடந்த 2023 - 24ல், 50,000 இணைப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.. கடந்த மார்ச் மாத்துடன் 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், மற்ற விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது...
முழு பணம்: குறிப்பாக, சுயநிதி பிரிவில், தட்கலில் வழித்தட செலவுக்கு முழு பணத்தையும் செலுத்திய விவசாயிகள், மின் இணைப்பு வழங்குமாறு தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம். அதனால்தான், மின்வாரியம், புதிய முடிவினை தற்போது எடுத்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் சொன்னதாவது:
"கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால், தென் மாவட்டங்களில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், மின் கம்பிகள் உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்துவிட்டன.. இதனால், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, கடந்த வருடம் வழங்கிய மின் இணைப்புகள் போக, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
பெருத்த நம்பிக்கை: நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது, இது விவசாயிகளுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications