சென்னையில் உச்சநீதிமன்ற கிளை! 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில், இது குறித்த முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கையில் சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் கெஜட்டில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது டெல்லியில் அரசியல் சாசன அமர்வு செயல்படும். இது தவிர, நாட்டின் 4 முனைகளில் நிரந்தர மண்டல கிளைகள் உருவாக்கப்படும். சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த நிரந்தர மண்டல கிளைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் என்பது டெல்லியில் மட்டும் இருப்பதால், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில மக்கள், வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சிரமப்பட்டு வருகிறார்கள். சாமானிய மக்கள் தொடுக்கும் வழக்குகள் பல கீழமை நீதிமன்றங்களுடன் நின்றுவிடுவதற்கு காரணம், உச்ச நீதிமன்றம் டெல்லி எனும் தொலை தூர நகரத்தில் இருப்பதால்தான். எனவே சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதேபோல இந்த கிளை அமைக்கப்படுவதால் நீதிமன்றத்திற்கும் பலன் இருக்கிறது. தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து தீர்க்க வேண்டும் எனில், கிளை நீதிமன்றங்கள் உதவும்.
இப்படி இருக்கையில் தற்போது அரசு கெஜட்டில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு 40 ஆண்டுக்கால எதிர்பார்ப்புக்கு தீர்வு கொடுத்திருக்கிறது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications