சபாஷ்.. பேரறிவாளன் விடுதலைக்கு தடையில்லை என்பதை உச்சநீதிமன்றம் உணர்த்தியுள்ளது: கு.ராமகிருஷ்ணன்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமின், அவரது தாய் அற்புதம்மாளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து பேசியுள்ள அவர், "உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கிய செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் மக்கள் அனைவரும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பார்கள். ஆயுள் தண்டனையை விட அதிகமான காலம் பேரறிவாளன் அனுபவித்து வந்த இந்த தண்டனையில் அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கூட செவி சாய்க்காமல் மத்திய அரசு அவரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனுக்கும் அவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த அவரது தாயார் அற்புதம்மாளுக்கும் கிடைத்த தற்காலிக வெற்றி. இந்த வெற்றி நிச்சயம் விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும். பேரறிவாளனின் விடுதலைக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்ற கருத்தை தான் இந்த ஜாமின் மூலம் உச்சநீதிமன்றம் மூலம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் குரலாக உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கு பேரறிவாளன் ஜாமின் வழக்கு முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது. பேரறிவாளன் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கி இருக்கிறார். இது அவரது நீண்ட நாள் சட்டப்போராட்டத்துக்கும், தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கும் கிடைத்த வெற்றி." என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications