சபாஷ்.. பேரறிவாளன் விடுதலைக்கு தடையில்லை என்பதை உச்சநீதிமன்றம் உணர்த்தியுள்ளது: கு.ராமகிருஷ்ணன்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமின், அவரது தாய் அற்புதம்மாளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து பேசியுள்ள அவர், "உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கிய செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் மக்கள் அனைவரும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பார்கள். ஆயுள் தண்டனையை விட அதிகமான காலம் பேரறிவாளன் அனுபவித்து வந்த இந்த தண்டனையில் அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கூட செவி சாய்க்காமல் மத்திய அரசு அவரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனுக்கும் அவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த அவரது தாயார் அற்புதம்மாளுக்கும் கிடைத்த தற்காலிக வெற்றி. இந்த வெற்றி நிச்சயம் விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும். பேரறிவாளனின் விடுதலைக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்ற கருத்தை தான் இந்த ஜாமின் மூலம் உச்சநீதிமன்றம் மூலம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் குரலாக உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கு பேரறிவாளன் ஜாமின் வழக்கு முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது. பேரறிவாளன் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கி இருக்கிறார். இது அவரது நீண்ட நாள் சட்டப்போராட்டத்துக்கும், தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கும் கிடைத்த வெற்றி." என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications