கவர்ச்சி உடையில் வந்து..விபூதி அடித்த இளம் பெண்..கம்பி நீட்டிய காதலன்..சுத்துப்போட்ட தாம்பரம் மக்கள்
சென்னை: சென்னை தாம்பரம் பகுதிக்கு வசீகரிக்கும் வகையில் உடை அணிந்து வரும் இளம் பெண் கடைக்கார்களை நம்ப வைக்கும் வகையில் சாதுர்யமாக பேச்சுக்கொடுத்து அசந்த நேரத்தில் நூதன முறையில் ஏமாற்றிவிட்டு, காதலனுடன் பைக்கில் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவரை கடைக்காரர் ஒருவர் கையும் களவுமாக பிடித்துக் கொடுத்துள்ளார்.
நீங்கள் இப்படியும் ஏமாறலாம் என்று போலீசார் தான் இனி அறிவிக்க வேண்டும்... கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட சிஸ்டம்கள் மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் வரம் தான். ஆனால் அதனை சாபம் என்று சொல்ல வைக்கும் வகையில் அவ்வப்போது சிலர் செயல்படவும் செய்கிறார்கள். கடைக்கார்களிடம் பழைய ஸ்கிரீன்ஷாட்களை காட்டி பணம் போட்டுவிட்டதாக ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிறவர்கள் இருக்கிறார்கள்.

வயதானவர்கள், மற்றும் வேலையில் மும்முரமாக இருப்பவர்களிடம் இப்படி ஏமாற்றுவது நடந்து வருகிறது. இதையே வேலையாக வைத்திருக்கிறார் இளம் பெண் ஒருவர். காதலனுடன் வரும் அந்த இளம் பெண், தாம்பரம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மார்டனாக டிப்டாப் ஆக உடை அணிந்து சாதுர்யமாக பேசுவதால் அந்த பெண் பணம் அனுப்பி இருப்பார் என்று நம்பி கடைக்கார்கள் ஏமாந்து வந்தார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில்,தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளுக்கு கவர்ச்சியாக உடை அணிந்த படி இளம்பெண் ஒருவர் வேகமாக வருவார். தனக்கு உடனடி மருத்துவத் தேவை இருப்பதாக கூறி, தான் சொல்லும் எண்ணுக்கு அவசரமாக பணம் பரிவர்த்தனை செய்யுமாறு கூறுவார்.
அதன்படி கடைக்காரர் பணம் அனுப்பிய பின்னர், அதற்கான பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் 'பேட்டி எம்' மூலம் 'கியூ.ஆர். ஸ்கேனர்' பயன்படுத்தி அனுப்புவதாக கூறுவார். அந்த நிமிடம் கடைக்காரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசிவிட்டு, பணத்தை அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் போலியாக எடுத்து வைத்து இருக்கும் பழைய 'ஸ்கிரீன் சாட்டை' காண்பித்துவிட்டு வெளியேறுவார். அங்கே தயாராக நிற்கும் காதலனின் இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில்தப்பிச்சென்று விடுவார். இப்படி அடிக்கடி நடந்து வந்தது.
இதுபற்றி கடைகளில் வந்த புகார்களின் அடிப்படையில், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை தேடி வந்தோம்.
இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரு செல்போன் கடையில் அந்த இளம்பெண், இதே பாணியில் மோசடி செய்ய முயற்சித்தார் சுதாரித்து கொண்ட கடைக்காரர், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இளம்பெண்ணை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தார். பின்னர் சேலையூர் போலீசில் ஒப்படைத்தார்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், கவர்ச்சியாக உடை அணிந்து ஏமாற்றி வந்த பெண்ணின் பெயர் ஷெரில்கன்சால்வெஸ் (வயது 20) என்பதும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியில் சகோதரனுடன் தங்கி இருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சேலத்தில் இப்படி நூதன மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications