சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டுக்கடங்காத கொரோனா.. தமிழகத்தில் மேலும் 5986 பேர் பாதிப்பு.. 116 பேர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 5986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தளவில், சிகிச்சை பெறுவோர் - 12,287, குணமடைந்தோர் - 1,06,626, பலி - 2,537 என்ற அளவில் உள்ளது.

Tamil Nadu: 5986 people have been affected with coronavirus in today

தமிழகத்தின் மொத்த பாதிப்பு 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், இன்று 5,742 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,9137 ஆக உயர்ந்துள்ளது.

'உன் மருமகன் என் பொண்டாட்டியை எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்கான்'உன் மருமகன் என் பொண்டாட்டியை எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்கான்" சண்டையில் போனது உயிர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39.88 லட்சத்தை கடந்தது.

English summary
In Tamil Nadu, another 5986 people have been affected with coronavirus. In Tamil Nadu, 116 people have been killed in a single day today. Also, today 5742 people have been discharged. Corona infection has been confirmed in 1175 people in Chennai today. In Chennai, 22 people have been reported dead.In the case of Chennai, the number of patients receiving treatment is 12,287, the number of survivors is 1,06,626 and the number of deaths is 2,537.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X