Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் இன்னொரு தீபாவளி பரிசு.. 2000+1000 மொத்தமாய் குடும்பத்துக்கு ரூ.3000! யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனிக்கும் பெற்றோருக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குதல், 1 ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்காக மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

இதுதவிர, பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் ரூ.2,000/- மாதந்தோறும் மாற்றுத்திறனாளி வங்கி கணக்குக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனித்து வரும் மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு கூடுதல் உதவித்தொகையாக ரூ.1,000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

Tamil Nadu Government Disabled Citizens mk stalin

தமிழ்நாடு அரசு

திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.25,000/-, 8 கிராம் தங்கமும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தங்களது தினசரி தேவைகள் பூர்த்தி செய்திட உதவி உபகரணங்களாக 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, செயற்கைக்கால் காளிபார் ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, கல்வி பயில்பவர்களுக்கு பிரெய்லி ரீடர் வாசிக்கும் கருவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்

கைக்கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப் பெருக்கி, காதலி கருவி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், சுய தொழில் புரிவோர், பணிபுரிவோர், கல்வி பயில்பவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

கல்வி உதவித்தொகை

மேலும் சட்டப்படிப்பு பயின்று வருபவர்களுக்கு ரூ.50,000/-, மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் கல்வி பயில்பவர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் களப்பணியாளர்கள் கொண்டு மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபடா வண்ணம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் அரசின் நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+