அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கு- ஆளுநர் ரவி அனுமதி மறுப்பு! 31 பேர் விடுதலைக்கு ஒப்புதல்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்துவிட்டார். கேசி வீரமணி விவகாரத்தில் கூடுதல் ஆ வணங்களைக் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, கேசி வீரமணி உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இந்த கோப்புகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார்.

தமிழ்நாடு அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் இந்த விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனையடுத்து அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோருக்கு எதிரான வழக்கில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி இருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மீதான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மீது வழக்கு தொடருவதற்கான கோப்புகளில் ஆளுநர் ரவி அனுமதி மறுத்து, கூடுதல் விவரங்களைக் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோப்புகளை திருப்பி அனுப்பி வைத்தார்.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதேபோல நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 71 பேரில் 31 பேர் விடுதலைக்கு மட்டும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications