முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் உடல்நலனை பாதுகாக்க அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்பன உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதன் விளைவாக, நீரிழப்பு, மயக்கம், உடல் சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் நிழல் பகுதிகளில் தங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்ககளின் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருப்பதால், வெயில் தாக்கம் வேகமாக பாதிக்கக்கூடும். அதேபோல், வெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். குடை எடுத்துச் செல்லுதல், தலைக்கு தொப்பி அணிதல், கண்களுக்கு சன்கிளாஸ் பயன்படுத்துதல் போன்றவை வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். மேலும், உடலில் காற்றோட்டம் ஏற்படும் வகையில் தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவில் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். அதேசமயம், மதுபானங்கள், காபி, தேநீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, இளநீர், பழச்சாறு, நுங்கு போன்ற இயற்கை பானங்களை உட்கொள்வது உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கடும் வெப்ப அலை காலத்தில் பொதுமக்கள் தங்களது உடல்நலத்தை முன்னிலைப்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சிறிய அலட்சியம் கூட பெரிய உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications