முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் உடல்நலனை பாதுகாக்க அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்பன உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதன் விளைவாக, நீரிழப்பு, மயக்கம், உடல் சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் நிழல் பகுதிகளில் தங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்ககளின் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருப்பதால், வெயில் தாக்கம் வேகமாக பாதிக்கக்கூடும். அதேபோல், வெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். குடை எடுத்துச் செல்லுதல், தலைக்கு தொப்பி அணிதல், கண்களுக்கு சன்கிளாஸ் பயன்படுத்துதல் போன்றவை வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். மேலும், உடலில் காற்றோட்டம் ஏற்படும் வகையில் தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவில் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். அதேசமயம், மதுபானங்கள், காபி, தேநீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, இளநீர், பழச்சாறு, நுங்கு போன்ற இயற்கை பானங்களை உட்கொள்வது உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கடும் வெப்ப அலை காலத்தில் பொதுமக்கள் தங்களது உடல்நலத்தை முன்னிலைப்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சிறிய அலட்சியம் கூட பெரிய உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?














Click it and Unblock the Notifications