ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! அமெரிக்காவின் அஸ்திரத்தை கையிலெடுத்த அரசு! ஸ்டாலின் இறக்கிய டீம்
சென்னை: தமிழ்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு போலீஸ் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பல தங்களின் எல்லையோர பாதுகாப்பிற்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. தீவிரவாத பகுதிகளில் தாக்குதல் நடத்த ராணுவ டிரோன்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, உள்நாட்டு அளவில் பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சிறிய அளவில் குவாட்காப்டர் வகை டிரோன்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கூட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதே நடவடிக்கைதான் தற்போது தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு - சட்டசபை
தமிழ்நாட்டில் ட்ரோன் போலீஸ் படை பிரிவை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். 3.80 கோடி மதிப்பில் இந்த போலீஸ் படை பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே இந்த படை தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை அடையாறில் சிக்னல் அருகே இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக தலைமை காவல் நிலையம் அங்கு கட்டுப்பட்டு உள்ளது. விரைவில் அந்த காவல் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிக்க முடியும்
இவர்கள் முதல் கட்டமாக 9 ட்ரோன்களையும் அதன்பின் நூற்றக்கணக்கான ட்ரோன்களையும் களமிறக்க உள்ளனர். சென்னையில் பறக்கவிட்டு மக்களை கண்காணிக்க உள்ளனர். சில ட்ரோன் இதில் 9 கிலோ மீட்டர் வரையிலும் சில அதைவிட அதிகம் தூரம் செல்ல கூடிய திறனும் கொண்டதாக இருக்கும். இந்த ட்ரோன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும். போலீசாருக்கு உதவியாக இருக்க முடியும். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எளிதாக துப்பு துலக்க முடியும்.

பைக்குகள் - இரவு நேரம்
உதாரணமாக இதில் இரவு நேரத்தில் பார்க்கும் இன்ப்ராரெட் கருவிகள், ஒரு அறைக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் ஹீட் சோதனை கருவிகள் உள்ளன. ஒரு நபர் கொள்ளை, கொலை செய்துவிட்டு பைக்கில் வேகமாக செல்கிறார் அவரை போலீஸ் பின் தொடருகிறது என்றால், இந்த ட்ரோன் அந்த சமயங்களில் உதவியாக இருக்கும். அதோடு ஹீட் சென்சார் மூலம் அவர் எங்கே இருக்கிறார். என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இதில் facial recognition முறை உள்ளது. இதனால் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் நபர்கள் ஏற்கனவே குற்ற செயல்களை செய்து இருந்தாலும் தெரிந்துவிடும்.

குற்றங்களை தடுக்க முடியும் - face recognition
ஓடி ஒளிந்து இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவியாக இருக்கும். அதோடு இதில் பேஷியல் லாக் உள்ளது. அதாவது பெரும் கூட்டத்தில் ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்கிறோம். ஆனால் அவர் கூட்டத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றாலும், இந்த ட்ரோன் அவரின் முகத்தை லாக் செய்துவிடும். இதனால் அவர் மட்டும் எங்கே நகர்ந்தாலும் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதனால் பெரும் கூட்டங்களில் நடக்கும் குற்றச்செயல்களை எளிதாக தடுத்து நிறுத்திவிட முடியும்.

மக்கள் எண்ணிக்கையை கூட கணக்கிட முடியும்
இது போக கூட்டம் நிகழ்ச்சிகள், மெரினா போன்ற இடங்களில் மக்களை கண்காணிக்க முடியும். ஒரு இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கிட முடியும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். டிராபிக் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். பைக் மூலம் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். போலீஸாரின் வேலையை இந்த ட்ரோன் எளிமையாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் தற்போது தமிழ்நாடு போலீஸ் படையில் ட்ரோன் போலீஸ் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் களமறிக்கி உள்ளார்.

டீம் எப்படி
இந்த புதிய படை பிரிவிற்கு இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் பொறுப்பேற்கிறார் . அவரின் மேற்பார்வையில் இந்த டீம் செயல்படும். மொத்தம் 8 பேர் கொண்ட போலீசார் குழு இதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த 8 பேரும் பொறியியல் படித்த போலீஸ் அதிகாரிகள் ஆவர். இவர்களுக்கு கீழ் 20 டெக்னிஷியன்கள் வேலை செய்ய உள்ளனர். இவர்கள் குவாட்காப்டர் வகை டிரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் போன்ற விமானங்களை இயக்க உள்ளனர்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications