தமிழகத்தில் மீண்டும்...எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்...கடம்பூர் ராஜூ விருப்பம்!!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற்று மீண்டு வந்து, தமிழகத்தில் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆயிரக்கணக்கான பாடல்களை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த அடிமை பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடி இருந்தார். இந்தப் பாடலின் மூலம் புகழ் அடைந்தார். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. இவருக்காக தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே நேரடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர் நலம் பெற்று வந்து மீண்டும் அவரது குரல் தமிழகம் எங்கும் ஒலிக்க வேண்டும்'' என்றார்.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மருத்துவ அறிக்கையில், தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications