உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சருடன் ஸ்டாலின் பேச்சு
உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்ககோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு துறை அமைச்சருடன் பேசியுள்ளார்.
சென்னை: உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வெளியுறவு துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 5 நாட்களாக போர் நீடிக்கிறது.போர் பதற்றம் நீடிக்கும் உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவிக்கின்றனர். அவர்களை மீட்க ஆபரேசன் கங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்ககோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications