இடி மின்னலுடன் இரவில் வெளுக்கும் மழை.. கேடிசிசி மக்கள் கவனம்.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: கேரளாவில் பருவமழை குறைந்து, தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவில் கேடிசிசி பகுதியில் மழை பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார்.
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னதாக அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமென்றும், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஊர்களில் கடந்த 2 நாட்களாக வெப்பம் தகித்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவானது. இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில்
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
https://twitter.com/praddy06/status/1678373268745510912
வானிலையின் திடீர் மாற்றம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் பருவமழை குறைந்து, தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மழை பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த மாவட்ட மக்கள் இரவு நேர பயணத்தின் போது குடை, ரெயின்கோட் கட்டாயம் வைத்துக்கொள்வது அவசியம்.












Click it and Unblock the Notifications