மீண்டும் கம்பீரமான காட்சி.. சென்னை ரிப்பன் மாளிகையில் பொறுத்தப்பட்டது 'தமிழ் வாழ்க' பெயர் பலகை
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் 'தமிழ் வாழ்க' மற்றும் 'தமிழ் வளர்க' பெயர் பலகை வைக்கப்பட்டது. தமிழ் அடையாளத்துடன் பழையபடி கம்பீரமாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்து " தமிழ் வாழ்க " பெயர் பலகையை நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. தமிர் வாழ்க புகைப்படங்கள் இருந்தது. இல்லாது ஆகிய புகைப்படங்களை ஒப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் குறித்து பலரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பதில் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், பெயர் பலகை இப்போது நீக்கப்படவில்லை. வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.

பலகை உடைந்தது
இதுபற்றி அவர் கூறும் போது " அந்த பதாகை 2009ல் எடுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் JNNURM நிதி வழியாக ரிப்பன் கட்டிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொழுது அந்த பதாகை நீக்கப்பட்டது. யாரோ பழைய புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் இப்பொழுது எடுத்தது போல் தவறாக பரப்புகிறார்கள். அந்த பலகை உடைந்து விழும் நிலையில் பழுது அடைந்த காரணத்திற்காகவே அகற்றப்பட்டது" என்றார்.

தமிழ் வாழ்க புகைப்படம்
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரி சொன்னது போல் 2009ல் புகைப்படம் நீக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. எனினும் கடந்த 3 ஆண்டுகளாக எடுத்த புகைப்படங்களில் தமிழ் வாழ்க புகைப்படம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இல்லை.

அரசு முடிவு
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க பெயர் பலகையை பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் நடந்து வந்தன.

கம்பீரமான காட்சி
இன்று பழைய படி சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் தமிழ் வாழ்க மற்றும் தமிழ் வளர்க பெயர் பலகை வைக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி கட்டிடம், தமிழ் அடையாளத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
-
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்











Click it and Unblock the Notifications