மீண்டும் கம்பீரமான காட்சி.. சென்னை ரிப்பன் மாளிகையில் பொறுத்தப்பட்டது 'தமிழ் வாழ்க' பெயர் பலகை
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் 'தமிழ் வாழ்க' மற்றும் 'தமிழ் வளர்க' பெயர் பலகை வைக்கப்பட்டது. தமிழ் அடையாளத்துடன் பழையபடி கம்பீரமாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்து " தமிழ் வாழ்க " பெயர் பலகையை நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. தமிர் வாழ்க புகைப்படங்கள் இருந்தது. இல்லாது ஆகிய புகைப்படங்களை ஒப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் குறித்து பலரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பதில் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், பெயர் பலகை இப்போது நீக்கப்படவில்லை. வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.

பலகை உடைந்தது
இதுபற்றி அவர் கூறும் போது " அந்த பதாகை 2009ல் எடுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் JNNURM நிதி வழியாக ரிப்பன் கட்டிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொழுது அந்த பதாகை நீக்கப்பட்டது. யாரோ பழைய புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் இப்பொழுது எடுத்தது போல் தவறாக பரப்புகிறார்கள். அந்த பலகை உடைந்து விழும் நிலையில் பழுது அடைந்த காரணத்திற்காகவே அகற்றப்பட்டது" என்றார்.

தமிழ் வாழ்க புகைப்படம்
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரி சொன்னது போல் 2009ல் புகைப்படம் நீக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. எனினும் கடந்த 3 ஆண்டுகளாக எடுத்த புகைப்படங்களில் தமிழ் வாழ்க புகைப்படம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இல்லை.

அரசு முடிவு
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க பெயர் பலகையை பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் நடந்து வந்தன.

கம்பீரமான காட்சி
இன்று பழைய படி சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் தமிழ் வாழ்க மற்றும் தமிழ் வளர்க பெயர் பலகை வைக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி கட்டிடம், தமிழ் அடையாளத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications