மழையோடு வரும் அக்டோபர்.. வெள்ளத்தை தவிர்க்க என்ன செய்வது? முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: வரும் அக்டோபர் முதல் வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மழையை எதிர்கொள்வது மற்றும் வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் அமைச்சர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல் மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றன.

ஆன்லைன் ரம்மி
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற இக்கூட்டத்தில், அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரண வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு குறித்தை விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசின் திட்டங்கள்
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. அத்துடன் நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள், புதிய சட்ட மசோதாக்கள், தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் கூட்டம்
இந்த நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் மழையை எதிர்கொள்வது, வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications