தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. இன்று 508 பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 353 பேர் ஆண்கள், 154 பேர் பெண்கள் என்று சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே, அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 279 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1779 இல் இருந்து 2008 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள். தமிழகத்தில் இன்று கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை என்பது 33 ஆக உயர்ந்துள்ளது.

டெஸ்ட் அதிகம்
இன்று, ஒரே நாளில் தமிழகத்தில் சிகிச்சை பெற்ற 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 858 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 828 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

குழந்தைகள்
10 வயதுக்கு உட்பட்ட 20 குழந்தைகளுக்கு இன்று தோற்று உறுதி செயப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாற்று பாலினத்தவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் இரண்டு மூன்றாம் பாலினத்தவர் கொரோனா வைரஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் பேச்சு
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 அரசு லேப்கள். 16 தனியார் லேப்கள். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை, 3,198 பேர் என்று, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை 6 மணியளவில் டிவியில் தோன்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிக பரிசோதனைகள் எடுக்கப்படுவதால், அதிக பாதிப்பு தெரிவதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications