அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார்.. தமிழக அரசு அறிவிப்பு.. கலக்கத்தில் மாணவர்கள்!
சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர்கள் வைத்திருந்த அரியர்கள் அனைத்தும் பாஸ் என்று என தமிழக அரசு அறிவித்தது. அதாவது இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முன்பு வைத்திருந்த அரியர் பாடங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,
இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே தமிழக அரசின் முடிவை விமர்சித்திருந்தார்.
பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று கூறினார். தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தொழில்நுட்ப கவுன்சில்
முன்னதாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது.

நீதிமன்ற வழக்கு
இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக கூறியது. எனினும் அரியர் விவகாரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தேர்ச்சி விவகாரம்
இதையடுத்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

தேர்வு நடத்த தயார்
அப்போது தமிழக அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரியரில் பாஸ் ஆன மாணவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications