சட்டசபை மசோதா மாநில அரசு அதிகார வரம்பை மீறுகிறதா? என்பதை கண்காணிப்பது ஆளுநர் பணி- ஆர்.என்.ரவி
சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதா மாநில அரசு அதிகார வரம்பை மீறுகிறதா? என்பதை கண்காணிப்பது ஆளுநர் பணி என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஆளுநர் சிவில் பயிற்சி பெறும் மாணவ-மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை ஆளுநர் வழங்கினார். தேர்வுக்கு தயாராவது, படிப்பதை புரிந்து படிக்கவேண்டும், ஆங்கிலத்தில் புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், ஆளுமையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினார். தனது அனுபவமாக காவல்துறை பணியில் மத்திய அரசின் பணியை தேர்வு செய்து பணியாற்றியதும், அரசின் பல்வேறு துறைகளில் சவால் மிகுந்த இடங்களில் பணியாற்றியதையும், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றியதையும் குறிப்பிட்டார். பின்னர் தற்போதுதான் அமைதியான சூழ்நிலை நிலவும், கலாச்சார பெருமைகொண்ட மக்கள் வாழும் தமிழகத்தில் வசிக்கிறேன். தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு இது வளர்ச்சியான ஒன்று என்று சொல்லலாம். தொன்மை வாய்ந்த மொழியான தமிழை கற்றுக்கொள்கிறேன் என்று பெருமை பொங்க தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்கள் ஏழாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரம் என்ன? மாநில அரசு என்னென்ன சட்டங்களை இயற்றலாம்? என கூறப்பட்டுள்ளது. ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றாவிட்டாலும் மாநில அரசே சட்டமியற்றலாம். ஒருவேளை மத்திய அரசு இயற்றிய சட்டம் போல மாநில அரசு சட்டம் இயற்றினாலும் அது மத்திய சட்டத்துக்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை இருப்பதை வைத்து அந்த கட்சி ஆளும் அரசு எந்த மசோதாவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதற்கு சட்ட அனுமதி வழங்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி, அந்த இயற்றப்பட்ட மசோதா மாநில அரசுக்குரிய அதிகார வரம்பை மீறாத வகையில் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பை பாதுகாப்பது ஆகும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications