தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மொழி இந்தி மொழியைவிட பழமையானது; தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணித்துவிட முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பனராஸ் பல்கலைக் கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி பேசுகையில், இந்தி மொழியைவிட தமிழ் மொழிதான் பழமையானது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு நிகரான பழமையான மொழி. தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது என கூறியுள்ளார்.

Tamilnadu Governor RN Ravi Opposes to Hindi Imposition

மேலும் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மகிழ்ச்சியானதுதான். தமிழை முழுமையாக ஆழமாகவும் படிக்க வேண்டும். திருக்குறள் மனித சமூகத்துக்கு தேவையானது; அனைத்து தரப்பினரும் திருக்குறளை தவறாமல் படிக்க வேண்டும். திருக்குறளின் ஆழமான கருத்துகளை அனைவரும் பயிலவும் வேண்டும். திருக்குறள் போல தமிழ் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளன என்றார் ஆளுநர் ரவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+