பாஜக-வுக்கு 3வது இடம்.. தமிழக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் - மகிழ்ச்சியில் அண்ணாமலை
சென்னை: பாஜகவுடன் பயணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள், கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மூன்றாம் இடம் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. பேரூராட்சியிலும் திமுகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக
சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியோடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது திமுக. நயினார் நாகேந்திரன் ஏற்படுத்திய சர்ச்சையால் அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தது. இதனால் பாஜக-வும் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் பாஜக-வுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறியவும் தமிழக பாஜக இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கியது.

தேர்தல் முடிவுகள்
பாஜக, 21 மாநகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது பாஜக. கன்னியாகுமரியில் சில இடத்தில் திமுக மற்றும் அதிமுகவை வாஷ் அவுட் செய்துள்ளது பாஜக. ஆனால் பல இடங்களில் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறது பாஜக. நகர்புற உள்ளாட்சி முடிவுகளின் படி திமுக, அதிமுக முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

அண்ணாமலை
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு வந்துள்ளோம்.

கூட்டணி
மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கவலையடைய வேண்டாம். தொடர்ந்து பயணிப்போம். பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். பாஜக வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தலில் அதிமுக பின் தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications