நங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது
சென்னை: சென்னை நங்கநல்லூரில் 120 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்பிஐ காலனி 2-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). தொழிலதிபரான இவர் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இவருடைய மனைவியும் பிள்ளைகளுமே இருந்தனர். இவர்களும் வீட்டை பூட்டி கொண்டு நேற்று முன் தினம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடம்
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 120 பவுன் நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ 1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

வீட்டுச் சுவர்
அப்போது அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 வடமாநில இளைஞர்கள் நேற்று முன் தினம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிவதும், ரமேஷின் வீட்டுச் சுவர் ஏறி குதித்ததும் தெரியவந்தது.

தொழிலாளர்கள்
கையில் ஒரு பையுடன் மீண்டும் சுவர் ஏறி குதித்து வெளியேறும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதையடுத்து வடமாநில இளைஞர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் சென்னை புறநகரில் பணியாற்றும் வடமாநில கட்டட தொழிலாளிகள், ஓட்டல்களில் பணியாற்றும் தொழிலாளர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை
இதில் 120 சவரன் நகைகளை கொள்ளை சம்பவத்தில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். அவர்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த பவேரியாக்கள்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நாடு முழுவதும் குற்றப்பரம்பரையின் கீழ் பவேரியாக்கள் உள்ளிட்ட இனங்கள் இருந்தன. இவர் காடு, மலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக ஈவு இரக்கமின்றி மூர்க்கத்தனமாக தாக்குபவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் குறித்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications