தமிழ்நாடு போலீசின் மிக முக்கியமான போர்ட்டல் ஹேக்.. குற்றவாளிகள் + காவலர்களின் டேட்டா திருட்டு?
சென்னை: தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு போலீசார் குற்றவாளிகள் தரவுகள், புகார் குறித்த தரவுகளைச் சேமித்து வைக்கத் தனியாக ஒரு போர்ட்டலை வைத்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாப்ட்வேர்: பொதுவாகக் குற்றவாளிகள் பிடிக்க, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்க மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு போலீசார் இந்த சாப்ட்வேரை தான் பயன்படுத்துவார்கள். மேலும், இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட போலீசாரின் விவரங்களும் இந்த போர்ட்டலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போர்ட்டலை தான் கடந்த 2024 மே 3ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலர் ஹேக் செய்துள்ளனர். மேலும், அவர்கள் அந்த டேட்டாவையும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'வலேரி' (Valerie) என்ற பெயரில் இயங்கும் அந்த ஹேக்கர் தான் தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டலை ஹேக் செய்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் கூறுகின்றனர்..
என்ன தரவு: குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் அந்த போர்ட்டலில் இருந்த தமிழ்நாடு ஃபேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேரில் தான் இருந்தது. மேலும், அதில் எஃப்ஐஆர் எண்கள், தேதிகள், புகார் தொடர்பான விவரங்கள் மற்றும் 50,000 காவல்துறை அதிகாரிகளின் முகவரிகள் மற்றும் தொலைப்பேசி எண்களும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது.
"ரூ.2000 கோடி.." 4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக பணம்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்! என்ன நடந்தது?
போலீஸ் விளக்கம்: இருப்பினும், போலீசார் இந்த விவகாரத்தில் வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். அதாவது சர்வரில் டேட்டா எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அட்மின் லாகின் சமரசம் செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், இப்போது சிக்கலைச் சரி செய்துவிட்டதாகவும் இதனால் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications