2வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 30621 பேருக்கு கொரோனா.. 297 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று 30621 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 2வது நாளாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று 30355 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அதைவிட அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது. லாக்டவுன் காரணமாக இதுவரை கேஸ்கள் பெரிதாக குறையவில்லை.

கேஸ்கள்
தமிழகத்தில் இன்று 30621 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 297 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16768 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

எத்தனை
தமிழகத்தில் இன்று 19287 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 183772 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1499485 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட்
தமிழகத்தில் இன்று 158129 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 151700 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 24154769 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 6991 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 42579 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2835 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 16271 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2173 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 14094 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications