இன்று தமிழ்நாட்டில் வானிலை என்ன? எங்கெல்லாம் மழை பெய்யும்.. சுட சுட வந்த வெதர் ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. சென்னை, உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.
முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.

சென்னை
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. அதேபோல் நேற்று டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்தது. இதனால் நேற்று பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

காவிரி
தமிழ்நாடு மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு மழை காரணமாக அதிகரித்தது.

வெள்ளம்
நேற்று இந்த அளவு 1 லட்சத்து 51 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், ஆற்று பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்று ஓரம் இருந்த 1060 மக்கள் வரை பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற ஆறுகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மழை கொஞ்சம் குறைந்தது.

மழை
நேற்று மாலைக்கு பின் சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும் இன்று இதுவரை மழை பெய்யவில்லை. இந்திய வானிலை மைய அறிக்கைபடி, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications