டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளையும், தொடர் எச்சரிக்கைகளையும் எடுத்து வந்தாலும், கள நிலவரம் இன்னும் மாறவில்லை என்றே குமுறுகிறார்கள் மதுப்பிரியர்கள்.

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், லஞ்சப் புகார்களும் தங்கு தடையின்றித் தொடர்வதாகக் வாடிக்கையாளர்களும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு டாஸ்மாக் நிர்வாக அமைப்பைச் சீரமைக்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் முதலமைச்சர் விஜய் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

TASMAC corruption news Tamil Nadu liquor bottle extra 10 rupees charge CM Vijay TASMAC reform updates TASMAC employees bribe allegations Tamil Nadu alcohol MRP violation cases TASMAC monthly illegal expenses liquor scams in Tamil Nadu trade union demands to Chief Minister Vijay TASMAC shop bribery system Tamil Nadu government liquor outlet rules 10

மாறாத 'பாட்டிலுக்கு 10 ரூபாய்' சாபம்

டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் மக்கள் அங்கு சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினை, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச ரீடைல் விலையை விட (MRP) கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது தான். தமிழகத்தின் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை இந்த 'கூடுதல் 10 ரூபாய்' என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு எத்தனை முறை எச்சரித்தாலும், ரசீது இல்லாமல் இந்தத் தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகக் குமுறுகிறார்கள் நுகர்வோர்கள்.

மாதம் 1.33 லட்சம் ரூபாய் ரகசியச் செலவு: ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் முற்றிலும் வேறுபட்ட, அதிர்ச்சியூட்டும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளைத் தடையின்றி நடத்துவதற்கும், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுப்பதற்கும், கடையின் அன்றாடப் பராமரிப்புச் செலவுகளுக்கும் என ஒரு கடைக்குத் தோராயமாக மாதம் 1.33 லட்சம் ரூபாய் வரை அதிகாரப்பூர்வமற்ற முறையில் செலவாவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மின்சாரக் கட்டணக் கூடுதல் தொகை, கடைகளின் கூடுதல் வாடகை, சரக்குகளை இறக்குவதற்கான கூலி மற்றும் கடைகளைச் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கான ஊதியம் என அனைத்தையும் ஊழியர்களே தங்கள் சொந்தப் பொறுப்பில் ஏற்க வேண்டியுள்ளது.

இந்த நிர்வாகச் சீர்கேடுகளாலும், அதிகாரிகளின் மாமூல் / லஞ்ச அழுத்தத்தாலும் தான் பாட்டிலுக்குக் 10 ரூபாய் கூடுதல் தொகை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாக அவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

முதலமைச்சர் விஜய் தலையீடு

டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள இத்தகைய ஓட்டைகளையும், முறைகேடுகளையும் வேரோடு நறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. சாதாரண ஊழியர்களை மட்டும் தண்டிப்பதால் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், ஒட்டுமொத்த டாஸ்மாக் சிஸ்டத்தையும் சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

எனவே, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, முறையான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உளவு துறை இறங்கியது

பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தீவிரமாக கண்காணிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் புகார்களின் உண்மைத் தன்மையை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் மதுபான விற்பனையில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் திமுக ஆட்சி காலத்தில் இருந்து தற்போது தவெக ஆட்சி அமைந்த பின்பும் இருந்து வருகிறது.

717 கடைகள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 717 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தது. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளைக் கண்டறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவிக்கும் ஊழியர்கள்

முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 717 கடைகளும் போர்க்கால அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கடைகளில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு (Salesmen) அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும், எங்குப் பணிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த முறையான வழிகாட்டுதல்களையோ அல்லது பணிமாற்ற உத்தரவுகளையோ டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் என்னாகுமோ என்ற கடுமையான அச்சத்தில் ஊழியர்கள் ஆழ்ந்துள்ளனர்.

வெடிக்கும் போராட்டங்கள்

இதன் காரணமாகத் ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு உடனடியாக மாற்று இடங்களில் பணி வழங்கி மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்களின் மாத ஊதியத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தி மாவட்ட மேலாளர்களிடம் மனு அளித்து வருகின்றனர்.

ஈரோடு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் தொடர்புடைய காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டித்து 144 டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் திடீரென அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் ஸ்ட்ரைக்கால் அரசுக்கு சுமார் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சிக்கலுக்கு முறையான தீர்வு காணும் வரை கடைகளைத் திறக்க மாட்டோம் என்று ஊழியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோட்டில் மொத்தமுள்ள 183 கடைகளில், இந்த விதிகளின் கீழ் 39 கடைகள் கண்டறியப்பட்டு, அதில் முதற்கட்டமாக 7 கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. மீதமுள்ளது 144 கடைகள் மட்டுமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+