Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக்கில் குவார்ட்டர் பாட்டிலில் மாற்றம்.. அரக்கோணத்துக்கு "பில்" கிடைச்சதா? மதுக்கடைகளில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுக்கடைகளில் நிலவும் முறைகேடுகளை தடுக்கும் விதத்தில் , புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சர் முத்துசாமி தந்துள்ள பேட்டி ஒன்று பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு, மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

tasmac liquor sales ranipet arakkonam

வரி வருவாய்: தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் பல மாநிலங்களின் அதிகப்படியான வரிவருவாய், மதுபானத்தை விற்பதால் வரும் வருமானமாக இருப்பதாக சொல்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது. எனினும், டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி, இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

தற்போது, அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.. இதுபோல விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மதுபானங்கள்: எனவேதான், கியூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, அதன்மூலம் பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது இதை நடைமுறைப்படுத்தி அறிவித்துள்ளது..

முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று கியூ ஆர் குறியீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளன.. மேலும், கலால் லேபில்களில் கியூ-ஆர் குறியீடுகளையும் அட்டைப் பெட்டிகளில் ஒரு பரிமாண பார்கோடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மது பாட்டில்: இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "மது பாட்டிலில் அச்சிடப்பட்ட கியூ-ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவுடன் பில் அச்சிடப்பட்டு வெளிவரும்... ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.

2 மாவட்டங்களில் இந்த புதிய முறையை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.. இதன் வரவேற்பை பொறுத்து, கணினியை மறு வடிவமைப்போம்... இன்னும் ஓரிரு மாதங்களில் மற்ற எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கணினி மயமாக்கப்டும்... அனைத்து கடைகளையும் கணினி மயமாக்குவதன் மூலம் அதிகாரிகள் கண்காணிக்கவும், இருப்புகளை சரிபார்க்கவும் முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கவுன்சிலிங்: இதனிடையே, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, "மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

கடைகள் மூடப்படும்: குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால், முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மதுக்கடைகள் மூடப்படும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தால் தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+