சதாப்தியை விட 30 நிமிஷம் கம்மி.. இதுதான் வேகமா? வந்தே பாரத் ரயிலை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக 'வந்தே பாரத்' ரயில் சென்னையிலிருந்து மைசூர் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு இந்த ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இது பிற்பகல் 12.30 மணிக்கு மைசூர் சென்றிருக்கிறது.
ஆனால் இந்த ரயில் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது "பயணத்தை 3 மணியிலிருந்து 40 நிமிடமாக குறைப்பதுதான் வளர்ச்சி. சதாப்தியை விட 30 நிமிடங்கள் வேகமாக போவதல்ல" என்று கூறியுள்ளனர்.

சோதனை ஓட்டம்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக நவீன 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ரயில் முதற்கட்டமாக இயக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வரை மூன்று வழித்தடங்களில் ரயில்கள் இயங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4வது வழித்தடமாக சென்னை-மைசூரு இடையே இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது.

பயண நேரம்
சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பயணித்து மதியம் 12.30 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 'சதாப்தி' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மைசூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி நேரம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 6.40 மணி நேரம். சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பயணித்து மதியம் 12.30 மணிக்கு மைசூர் சென்று சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 'சாதாப்தி' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மைசூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி நேரம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 6.40 மணி நேரம்.

20 நிமிடங்கள்
வெறும் 20 நிமிடங்கள் பயண இடைவெளி கொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் டிக்கெட்டு சதாப்தியை விட இரண்டு மடங்கு அதிகம் என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 4 வது வழித்தடமாக சென்னை-மைசூரு இடையே இந்த ரயில் வரும் 10ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார்.

விமர்சனம்
இந்நிலையில் இந்த 'வந்தே பாரத்' ரயிலை இந்தோனேஷியாவின் அதிவேக ரயிலுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் வழித்தடத்தில் சீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வழித்தடத்தின் மொத்த பயண நேரம் 3 மணி நேரமாகும். ஆனால் சீனாவின் அதிவேக ரயில் இதனை வெறும் 40 நிமிடங்களில் கடந்துவிடும் என்று அந்நாட்டின் ரயில்வேத்துறை கூறியுள்ளது. இதனை குறிப்பிட்டு "பயணத்தை 3 மணியிலிருந்து 40 நிமிடமாக குறைப்பதுதான் வளர்ச்சி. சதாப்தியை விட 30 நிமிடங்கள் வேகமாக போவதல்ல" என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications